முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும் தெரிந்து கொள்வோம்.
1. முருகன் - அழகன்.
2. பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
3. சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
4. சேயோன் - செந்நிறம் உடையவன்.
5. வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் <உடையவன்.
6. வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன். அரன் மகன் - சிவனின் புத்திரன்.
7. அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
8. அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
9. குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் <உரைத்தவன்.
10. கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.
11. கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
12. கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
13. கந்தன் - வலிமையான தோள்களை உ<டையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
14. காங்கேயன் - கங்கை மைந்தன்
15. கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
16. குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
17. குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
18. குழகன் - அழகன், இளமையானவன்.
19. குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
20. குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
21. கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.
22. சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.
23. சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
24. சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
25. சுரேசன் - துன்பம் நீக்குபவன்.
26. சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
27. செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
28. சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்
29. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.
30. தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.
31. தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.
32. பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.
33. மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.
34. மாயோன் மருகன் - திருமாலின் மருமகன்.
35. வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.
36. பாகுலேயன் - கார்த்திகேயன்.
37. விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
38. சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.
39. சாமி - செல்வன்.
40. முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
41. சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.
1. முருகன் - அழகன்.
2. பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
3. சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
4. சேயோன் - செந்நிறம் உடையவன்.
5. வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் <உடையவன்.
6. வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன். அரன் மகன் - சிவனின் புத்திரன்.
7. அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
8. அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
9. குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் <உரைத்தவன்.
10. கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.
11. கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
12. கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
13. கந்தன் - வலிமையான தோள்களை உ<டையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
14. காங்கேயன் - கங்கை மைந்தன்
15. கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
16. குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
17. குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
18. குழகன் - அழகன், இளமையானவன்.
19. குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
20. குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
21. கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.
22. சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.
23. சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
24. சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
25. சுரேசன் - துன்பம் நீக்குபவன்.
26. சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
27. செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
28. சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்
29. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.
30. தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.
31. தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.
32. பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.
33. மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.
34. மாயோன் மருகன் - திருமாலின் மருமகன்.
35. வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.
36. பாகுலேயன் - கார்த்திகேயன்.
37. விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
38. சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.
39. சாமி - செல்வன்.
40. முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
41. சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.